sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டூவீலரில் 'லிப்ட்' கேட்டு பயணித்த பெண் துாய்மை பணியாளர்கள் பலி மதுரை திருமங்கலத்தில் லாரி மோதியதால் பரிதாபம்

/

டூவீலரில் 'லிப்ட்' கேட்டு பயணித்த பெண் துாய்மை பணியாளர்கள் பலி மதுரை திருமங்கலத்தில் லாரி மோதியதால் பரிதாபம்

டூவீலரில் 'லிப்ட்' கேட்டு பயணித்த பெண் துாய்மை பணியாளர்கள் பலி மதுரை திருமங்கலத்தில் லாரி மோதியதால் பரிதாபம்

டூவீலரில் 'லிப்ட்' கேட்டு பயணித்த பெண் துாய்மை பணியாளர்கள் பலி மதுரை திருமங்கலத்தில் லாரி மோதியதால் பரிதாபம்


ADDED : அக் 22, 2024 06:37 AM

Google News

ADDED : அக் 22, 2024 06:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி-ருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் டூவீலரில் 'லிப்ட்' கேட்டு பயணித்த இரு பெண் துாய்மை பணியாளர்கள் லாரி மோதி இறந்தனர்.

திருமங்கலம் நகராட்சியில் தற்காலிக துாய்மை பணியாளர்களாக இருந்தவர்கள் பாண்டியன் நகர் நாகரத்தினம் 50, கள்ளிக்குடி அருகே அகத்தாபட்டி ஈஸ்வரி 40.

நேற்று மதியம் 3:45 மணிக்கு நகராட்சியில் இருந்து கற்பக நகர் பகுதிக்கு வேலைக்காக புறப்பட்டனர்.

திருமங்கலம் தேவர் சிலை அருகே விமான நிலைய ரோட்டில் டூவீலரில் வந்தவரிடம் 'லிப்ட்' கேட்டு சென்றனர். 100 அடி கூட தாண்டாத நிலையில் பள்ளம் காரணமாக டூவீலர் தடுமாறியதில் ஓட்டி வந்த நபர் இடது புறமாகவும், இரு பெண்களும் வலது புறமாகவும் கீழே விழுந்தனர்.

அப்போது அவ்வழியாகவந்த கனரக லாரி ஏறியதில்இரு பெண்களும் தலை நசுங்கி பலியாயினர். டூவீலர் ஓட்டி வந்த நபர் தப்பி ஓடிவிட்டார். லாரி டிரைவர் திருச்சி துறையூர் ஜெயபிரகாஷ் 21, தப்பி ஓடினார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் உள்ள ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதற்கான மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யாததால் விபத்து நடந்த ரோட்டையே வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர்.

இந்த ரோடு மேடு பள்ளமாகவும், சேறு சகதியுமாகவும் உள்ளதால் தினமும் சிறுசிறு விபத்துகள் நடக்கின்றன. நேற்று இந்த ரோடு 2 உயிர்களை பலி வாங்கி விட்டது.






      Dinamalar
      Follow us