sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற புதிய தாமிர கொப்பரை திருவண்ணாமலையில் தயாராகிறது

/

குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற புதிய தாமிர கொப்பரை திருவண்ணாமலையில் தயாராகிறது

குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற புதிய தாமிர கொப்பரை திருவண்ணாமலையில் தயாராகிறது

குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற புதிய தாமிர கொப்பரை திருவண்ணாமலையில் தயாராகிறது


ADDED : நவ 11, 2025 03:46 AM

Google News

ADDED : நவ 11, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: நவ. 11-: திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு உபயமாக வழங்க கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, மதுரை தி.மு.க., வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி சார்பில் புதிய தாமிரக் கொப்பரை திருவண்ணாமலையில் தயாராகிறது.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயில் சார்பில் ஆண்டுதோறும் மலை மேல் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின்மேல் மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர தீப கொப்பரை வைத்து அதில் 300 லிட்டர் நெய், 150 மீட்டர் காடா துணியில் திரி தயாரித்து, 5 கிலோ சூடம் மூலம் தீபம் ஏற்றப்படும். அந்த தீப தாமிர கொப்பரை 1993 முதல் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு நான்கரை அடி உயரம், இரண்டரை அடி அகலத்தில் புதிய தாமிர தீப கொப்பரையை பயன்படுத்த திருவண்ணாமலையில் தயாரிக்கப்படுகிறது. திருவண்ணாமலை தீப கொப்பரை தயாரித்த வல்லுனர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us