sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போன் போதுமே...

/

ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...


ADDED : பிப் 22, 2024 06:27 AM

Google News

ADDED : பிப் 22, 2024 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோட்டில் பாதாளசாக்கடை நீர்

மதுரை பைபாஸ் ரோடு ராம்நகர் 5வது தெருவில் சர்வீஸ் ரோட்டில் பாதாளசாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் தேங்கி, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மீனாட்சி சுந்தரம்,எஸ்.எஸ். காலனி

குரங்குகள் தொல்லை

மேலுார் சிவன் கேவில் தெரு, ஆறுமுகம் பிள்ளை தெரு உட்பட 15க்கும் மேற்பட்ட தெருக்களில் குரங்குகள் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகானந்தம், மேலுார்

சிக்னல் வேலைசெய்யவில்லை

மாநகராட்சி வார்டு 47 ல் தெற்கு வாசல் சின்னக்கடை வீதி சந்திப்பில் சிக்னல் வேலை செய்யவில்லை. பிளாட்பாரங்களில் வைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

-அசோக், தெற்குவாசல்

இடையூறு குப்பைத்தொட்டி

மாநகராட்சி வார்டு 49 இஸ்மாயில்புரம் 6வது தெரு கடைசியில் தேவையின்றி குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றத்துடன் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

- ராஜ்குமார், இஸ்மாயில்புரம்

நாய்கள் தொல்லை

மாநகராட்சி வார்டு 60 எல்லீஸ்நகர் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சிறுவர்களை, டூவீலரில் செல்வோரை துரத்துகிறது. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பத்மநாபன், எல்லீஸ்நகர், மதுரை

தெருக்களில் மாடுகள்

மதுரை காமராஜர் சாலை கான்பாளையம் பகுதி, அரசமரம் விநாயகர் கோயில் சந்து போன்ற இடங்களில் மாடுகள் உலா வருகின்றன. நடவடிக்கை தேவை.

- ஸ்ரீனிவாசன், கான்பாளையம்

தெருவிளக்குகள் எரியவில்லை

மாநகராட்சி வார்டு 58 மேலப்பொன்னகரம் 8வது தெருவில் உள்ள விளக்குகள் எரியவில்லை. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இரவில் நடந்து செல்ல அச்சமாக உள்ளது.

- மாரியப்பன், மேலப்பொன்னகரம்

தெருக்களில் கழிவுநீர்

பழைய குயவர்பாளையம் ரோடு காசிமல்லி தோப்பு சாக்கடை வாய்கால் முழுவதும் நிரம்பி தெருக்களில் கழிவுநீர் செல்கிறது. மேலும் பாதுகாப்பற்ற முறையில் வாய்க்கால் உள்ளது. இதற்கு சுற்றுசுவர் கட்டவேண்டும்.

- ராம்பாபு, குயவர்பாளையம்






      Dinamalar
      Follow us