
வீதிகளில் கழிவுநீர்
மதுரை அம்மன் சன்னதி, வடக்கு சித்திரை வீதி சந்திப்பு பகுதி ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பக்தர்கள் இப்பகுதியில் செல்ல முடியவில்லை. குப்பையை மாநகராட்சியினர் அகற்றினாலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
-சிவராமநாதன், விளக்குத்துாண், மதுரை.
வேகத்தடை தேவை
குலமங்கலம் மெயின் ரோடு, பனங்காடி , வாகைக்குளம் நுழைவுவாயில் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து நடக்கிறது. இந்த ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
- மூகாம்பிகை, அன்பு நகர்.
பாம்புகள் தொல்லை
மதுரை மாநகராட்சி வார்டு 36 முகவை தெருவின் கடைசியில் உள்ள காலி பிளாட்டுகளில் குப்பையைக் கொட்டுகின்றனர். காய்கறிக் கழிவு, சமையல் கழிவுகள் குவிந்து கிடப்பதால் பாம்புகள் உலா வருகின்றன.
- நாகசுப்பிரமணி, கோமதிபுரம்.
பாதாள சாக்கடை அடைப்பு
மதுரை மாநகராட்சி வார்டு 22 மீனாட்சி நகர் 5வது தெருவில் பாதாள சாக்கடை குழாய் அடைப்பு ஏற்பட்டு ரோடுகளில் செல்கிறது. துர்நாற்றம் அதிகமாக இருப்பதால் இப்பகுதியில் செல்ல முடியவில்லை. உடனே நடவடிக்கை தேவை.
-ராம்பாபு, விளாங்குடி.
சேதமடைந்த ரோடு
சிம்மக்கல் காமாட்சிபுரம் அக்ரஹாரத்தில் இருந்து அனுமார் கோயில் செல்லும் வழியில் வாய்க்கால் பகுதி பாதை சேதமடைந்து உள்ளது. இவ்வழியில் ஆட்டோ கூட வருவதில்லை என்பதால் உடனே சரிசெய்ய வேண்டும்.
- ஆனந்தலட்சுமி, காமாட்சிபுர அக்ரஹாரம், சிம்மக்கல்.
ரோட்டில் குப்பை
செக்கானுாரணி வள்ளி நகர் வீதி நுழைவாயிலில் குப்பையை கொட்டுகின்றனர். அருகில் பள்ளி, கோயில்கள் உள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
- ராஜபாண்டி, செக்கானுாரணி.
இடையூறு மின்மாற்றி
மதுரை வண்டியூர் சவுராஷ்டிராபுரம் 13 வது தெருவில் பல ஆண்டுகளாக நுழைவாயிலில் மின்மாற்றி இடையூறாக உள்ளது. வேறிடத்தில் மாற்றி அமைக்க பல முறை மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை.
- சீனிவாசன், அனுமார்பட்டி
துர்நாற்றம் தரும் ரோடு
மதுரை தெப்பக்குளம் காமராஜர் சாலை பதினாறு கால் மண்டபம் அருகே துர்நாற்றத்துடன் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பஸ் , ஆட்டோவுக்கு நிற்க முடியவில்லை. மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரியா, தெப்பக்குளம்

