
ரோடு ஆக்கிரமிப்பு
மதுரை சின்னக்கடை வீதி வடமலையான் மருத்துவமனைக்கு முன்பாக ரோட்டை ஆக்கிரமித்துஉள்ள பழம், செருப்புக்கடைகளால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அகற்ற வேண்டும்.
- - அசோக், தெற்குவாசல்.
தேசிய நெடுஞ்சாலையில் கழிவு
யா.ஒத்தக்கடை தேசிய நெடுஞ்சாலையில் கோழி, இதரக் கழிவுகளை தினமும் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் பயணப்படுவது சிரமமாக உள்ளது. உடனடி நடவடிக்கை தேவை.
- - ராஜேந்திரன், கிருஷ்ணா நகர்.
புதிய டிரான்ஸ்பார்மர் வேண்டும்
வேடர்புளியங்குளத்தில் வீடுகள் அதிகரித்து வருவதால் குறைந்த மின் அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் கூடுதலாக ஒரு மின் டிரான்ஸ்பார்மர் அமைக்க மின்வாரியம் முன்வர வேண்டும்.
- - ரேணுகா தேவி, மதுரை.
கால்வாய் பணி தாமதம்
மேட்டுப்பட்டி ஊராட்சியில் பல மாதங்களாக கழிவுநீர் கால்வாய் பணி முடிவடையாமல் நிலுவையில் உள்ளது. மக்கள் அவதிப்படுகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - சரண், அலங்காநல்லுார்
சாக்கடை நீர் அடைப்பு
மதுரை வசந்த நகர் 1வது தெருவில் வீடுகள்முன்பு 10 நாட்களாக பாதாள சாக்கடை அடைத்து கழிவு நீர் நிரம்பி வழிகிறது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ். சிவபாலன், வசந்த நகர்

