sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குன்றத்து கோயிலில் மூலவர்களுக்கு பாலாலயம்

/

குன்றத்து கோயிலில் மூலவர்களுக்கு பாலாலயம்

குன்றத்து கோயிலில் மூலவர்களுக்கு பாலாலயம்

குன்றத்து கோயிலில் மூலவர்களுக்கு பாலாலயம்


ADDED : ஏப் 10, 2025 06:50 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக மூலவர்களுக்கு நேற்று பாலாயம் நடந்தது.

ஏப். 7 முதல் நேற்று காலை வரை நான்கு கால யாகசாலை பூஜை நடந்தது. பூஜைக்காக கோயில் திருவாட்சி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு 5 யாக குண்டங்களும், கற்பக விநாயகர், துர்கை, சத்யகிரீஸ்வரர், பவள கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, பரிவார தெய்வங்களுக்கு 8 குண்டங்கள் அமைக்கப்பட்டன.

தங்க குடத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமியின் சக்தியும், மற்ற மூலவர்களான கற்பக விநாயகர், துர்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக் கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சக்திகள் வெள்ளிக் குடங்களிலும் கலை இறக்கம் செய்யப்பட்டது. பரிவார தெய்வங்களின் சக்திகள் வரைபடங்களில் கலை இறக்கம் செய்யப்பட்டு, 200 சொம்புகளில் புனித நீர் நிரப்பி யாகசாலையில் வைத்து பூஜை நடந்தது.

நேற்று காலை 4ம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு தீபாராதனை முடிந்து, மூலவர்கள் சக்தி கலை இறக்கப்பட்டு புனித நீர் குடங்கள் சண்முகர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அத்தி மர மூலவர்கள் விக்ரகங்களுக்கு சக்தி கலையேற்றம் செய்தனர். மூலவர் கரத்தில் தங்க வேலுக்கு புனித நீர் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏப். 7 முதல் திருப்பணிக்காக மூலஸ்தானத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் கும்பாபிஷேகம் முடியும் (ஜூலை 14) வரை அனைத்து பூஜைகளும் மூலவர்களின் அத்திமர விக்கிரகங்களுக்கு நடைபெறும். நேற்று முதல் சண்முகர் சன்னதிவரை அத்திமர மூலவர்கள் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பாலாலய நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்பதேவன், ராமையா, பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us