தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பலத்த காற்றால் சாய்ந்த புளியமரம்

பலத்த காற்றால் சாய்ந்த புளியமரம்

பலத்த காற்றால் சாய்ந்த புளியமரம்


ADDED : மே 07, 2025 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2025 02:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6:00 மணியளவிலிருந்து பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. உசிலம்பட்டி -- தேனி ரோட்டில் மாதரை அருகே 100 ஆண்டுகள் பழமையான புளியமரம் காற்றால் வேரோடு சாய்ந்தது.

ரோட்டின் ஒரு பகுதியில் விழுந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதித்தது. தீயணைப்புத்துறை வீரர்கள், போலீசார் இயந்திரம் மூலம் மரத்தை அகற்றினர்.

இதேபோல் உசிலம்பட்டி - வத்தலகுண்டு ரோடு பஸ் நிறுத்தப் பகுதியில் இருந்த கொடிக்காய் மரம் உடைந்து விழுந்தது. இதனையும் அப்புறப்படுத்தினர்.

மரங்கள் விழுந்த போது அந்தப்பகுதியில் யாரும் இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us