/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து கோயிலில் ஆடிப்பூர திருவிழா
/
குன்றத்து கோயிலில் ஆடிப்பூர திருவிழா
ADDED : ஜூலை 29, 2025 01:29 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயில்களில் ஆடிப்பூரத் திருவிழா நடந்தது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்ஸவர் சன்னதியில் கோவர்த்தனாம்பிகை எழுந்தருளினார். அம்பாள் முன் வெள்ளிக்குடத்தில் புனிதநீர் நிரப்பி, பூஜை நடந்தது. அரிசி, நெல், வெல்லம், வளையல்கள், வாழைப்பழம் வைத்து யாகம் வளர்த்து, அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டது.
படிகளில் வைத்திருந்த நெல், அரிசியால் அம்பாள் முன் 3 முறை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி முடிந்து புனிதநீர் அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டன. இரவு அம்பாள் சிம்மாசனத்தில் வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார்.
* ஹார்விபட்டி ஜோதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் முடிந்து வளையல்கள் சாத்துப்படி செய்து தீப ஆராதனை நடந்தது.
* கல்களம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள சண்டிகா துர்கா பரமேஸ்வரிக்கு பூஜைகள் முடிந்து வளையல் அலங்காரமானது.