sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 ஐயப்பன் கோயிலில் ஆராட்டு விழா

/

 ஐயப்பன் கோயிலில் ஆராட்டு விழா

 ஐயப்பன் கோயிலில் ஆராட்டு விழா

 ஐயப்பன் கோயிலில் ஆராட்டு விழா


ADDED : டிச 30, 2025 07:09 AM

Google News

ADDED : டிச 30, 2025 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: நாகமலை புதுக்கோட்டை நிலையூர் கால்வாய் புல்லுாத்து ரோட்டில் ஆனந்த ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு நாகமலை மவுன குருசாமி சன்னாசி சுவாமிகள் சபரி பாதயாத்திரை ஐயப்ப பக்த குழு சார்பில் ஆராட்டு விழா நடந்தது.

இதையொட்டி விநாயகர் பூஜை, ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து குருசாமி சோமசுந்தரம், துணை குருசாமிகள் சின்னன், ஜெகநாதன், உதயகுமார் வைகை (நிலையூர் கால்வாய்) தென்பம்பா நதிக்கு சுவாமியை அழைத்து வந்தனர். சுவாமிக்கு பால், சந்தனம், ஜவ்வாது, இளநீர், நெய் உட்பட பல்வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகத்தை அர்ச்சகர் அருணாச்சலம் செய்தார். பின் கலசாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களின் சரண கோஷத்துடன் ஆராட்டு விழா நடந்தது. நான்குகால் மண்டபத்தில் ஊஞ்சல் சேவா தரிசனம், மதியம் மண்டலாபிஷேகம், சரணகோஷ ஆராதனையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 6:30 மணிக்கு பஞ்ச சிவ கயிலாய வாத்தியம் முழங்க, வாண வேடிக்கையுடன் சுவாமியின் திருத்தேர் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை ஐயப்ப பக்த குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us