sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வாகனங்களை நிறுத்துவதால் அதிகரிக்கும் விபத்துக்கள்

/

வாகனங்களை நிறுத்துவதால் அதிகரிக்கும் விபத்துக்கள்

வாகனங்களை நிறுத்துவதால் அதிகரிக்கும் விபத்துக்கள்

வாகனங்களை நிறுத்துவதால் அதிகரிக்கும் விபத்துக்கள்


ADDED : ஏப் 19, 2025 06:25 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்; மேலுார் மெயின் ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதால் நடந்து செல்லும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.

மேலுார் தாலுகாவில் 84 வருவாய் கிராமங்கள் உள்ளன. இக் கிராமங்களை சேர்ந்த பலஆயிரம் பேர் தினமும் தங்கள் அவசிய, அலுவல் பணிகள் காரணமாக மேலுார் வந்து செல்கின்றனர். இதனால் எந்நேரமும் மக்கள் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது.

மேலுார் நகரில் மெயின் ரோட்டில் வியாபாரிகள் கடைகளை ரோடு பகுதியில் 5 அடிக்கு மேல் நீட்டியும், கடைக்கு முன் சில வியாபாரிகள் வாடகைக்கும் விட்டுள்ளனர். நடைபாதையில் கடையின் பெயர் பலகையையும், வாகனங்களையும் நிறுத்தியுள்ளனர்.

அதனால் நடைபாதையில் நடக்க இயலாத மக்கள் மெயின் ரோடுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.

பொது மக்கள் கூறுகையில், ''மெயின் ரோட்டில் வியாபாரிகள், ஷேர் ஆட்டோக்கள் போட்டி போட்டு நிறுத்தி நடைபாதையை ஆக்கிரமிக்கின்றன. நடைபாதையை பயன்படுத்த முடியாமல் மக்கள் நடு ரோட்டில் செல்ல வேண்டியள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. ரோட்டில் வாகனங்களை நிறுத்துவோர் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் கூறுகையில், வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us