sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பா.ஜ.,வை விட அ.தி.மு.க., ஆபத்தான கட்சி; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் விமர்சனம்

/

பா.ஜ.,வை விட அ.தி.மு.க., ஆபத்தான கட்சி; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் விமர்சனம்

பா.ஜ.,வை விட அ.தி.மு.க., ஆபத்தான கட்சி; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் விமர்சனம்

பா.ஜ.,வை விட அ.தி.மு.க., ஆபத்தான கட்சி; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் விமர்சனம்


ADDED : மார் 19, 2024 06:04 AM

Google News

ADDED : மார் 19, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : பா.ஜ.,வைவிட அ.தி.மு.க., ஆபத்தான கட்சி'' என மதுரையில் நடந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மதுர நகர், புறநகர் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் சிறப்பு பேரவை கூட்டம் நேற்று நடந்தது.

மாவட்ட செயலாளர்கள் கணேசன், ராஜேந்திரன் பங்கேற்றனர். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:

வருகிற தேர்தல் பா.ஜ.,வை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிமூலம் வீழ்த்த வேண்டும். எதிரணியினர் கொள்கை இல்லாமல் பதவி வெறிக்காக கூட்டணி அமைத்துள்ளனர். தற்போது பா.ஜ.,வோடு பா.மக.., கூட்டணி அமைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி. அவர்களிடம் கொள்கை, லட்சியம் கிடையாது. சந்தர்ப்பவாதம், பதவி வெறியைத் தவிர வேறில்லை.

பா.ஜ.,வை வீழ்த்தவது நமது நோக்கம். அதற்காக அ.தி.மு.க.,வை பற்றி பேசாமல் அவர்களை நல்லவர்கள் ஆக்கி விடக்கூடாது. பா.ஜ.,வைவிட ஆபத்தானவர்கள் அ.தி.மு.க.,வினர். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பொன்முடிக்கு அமைச்சர் பதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் தமிழக கவர்னரிடம் பரிந்துரைத்தார். அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு கவர்னருக்கு உள்ளது. ஆனால் பொறுப்பு வழங்க முடியாது என மத்திய பா.ஜ., அரசின் பிரதிநிதி போல செயல்படுகிறார். இது இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.

தமிழகத்தில் பா.ஜ., வெற்றி பெறாது என பிரதமருக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் 3 மாதங்களுக்கு முன்பே பிரசாரத்தை துவக்கி விட்டார். இவ்வாறு அவர் பேசினார்..






      Dinamalar
      Follow us