ADDED : ஜன 06, 2024 06:20 AM
அ நிறம் | அளவு
திருநகர்: மதுரை விளாச்சேரியில் அகில இந்திய குலாலர் முன்னேற்ற மண்பாண்ட தொழிலாளர் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார்.
தொழிற்சங்கத் தலைவர் கருப்புசாமி, மாவட்டத் தலைவர் ராமலிங்கம், செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். திருச்சி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், பரமசிவம், மாநில நிர்வாகி சண்முகசுந்தரம், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேஸ்வரன், கிருஷ்ணகுமார் கலந்து கொண்டனர்.
மதுரையில் மார்ச் 3ல் மகளிர் முன்னேற்ற மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
