ADDED : பிப் 16, 2026 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டை முன்னிட்டு டி.கல்லுப்பட்டியில் வேளாண் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வேளாண் உதவி இயக்குநர் விமலா, வேளாண்மை அலுவலர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர்.
வேளாண்மை துறையில் பெண்களின் பங்கு, சம வாய்ப்புகள், அரசு திட்டங்கள் போன்றவை விளக்கப்பட்டன. இத்துறையில் பாலின சமத்துவத்தை முன்னேற்றி, பெண்களுக்கு அதிகாரமளித்தலின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக பெண் விவசாயிகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், வேளாண் கல்லுாரி மாணவிகள் அலுவலக வளாகத்தில் சுவரோவியம் வரைந்தனர். கிராமப்புற பணி அனுபவத் திட்ட பயிற்சியின் பகுதியாக, வேளாண் மாணவிகள் ஏற்பாடு செய்தனர்.

