ADDED : பிப் 16, 2026 05:49 AM
திருப்பரங்குன்றம்: மதுரை தெற்கு மாவட்ட காங்., செயற்குழுக் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
மாணிக்கம் தாகூர் எம்.பி., தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் உலகநாதன், முன்னாள் தலைவர் விஜய பிரபாகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், நிர்வாகிகள் நாகேஸ்வரன், சுப்பிரமணி, சரவணன், ராமசாமி, மகேந்திரன், கவுன்சிலர் சுவேதா உள்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது உட்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் பேசுகையில், 'கடந்த தேர்தலில் காங்கிரஸ் தொகுதிகளில் தி.மு.க., வினர் எதிராக வேலை பார்த்ததால் பலர் தோற்கடிக்கப்பட்டனர். சட்டசபை தேர்தல் வந்தால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற காங்., தயவை தி.மு.க., நாடுகிறது. ஆட்சிக்கு வந்த பின்பு காங்கிரசை கொத்தடிமை போல நடத்துகிறது. உள்ளாட்சி, கூட்டுறவு, கோயில் அறங்காவலர்கள் என அனைத்திலும் காங்கிரசுக்கு 30 சதவீதம் இடமளிக்க வேண்டும். மறுத்தால் கூட்டணியில் இருந்து காங்., வெளியேறி, த.வெ.க., வுடன் செல்ல வேண்டும், என்றனர்.

