/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொடிக் கம்பங்கள் அகற்றம் உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க., மனு
/
கொடிக் கம்பங்கள் அகற்றம் உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க., மனு
கொடிக் கம்பங்கள் அகற்றம் உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க., மனு
கொடிக் கம்பங்கள் அகற்றம் உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க., மனு
ADDED : ஆக 06, 2025 08:15 AM
மதுரை : கொடிக் கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தடை கோரிய வழக்கில் அ.தி.மு.க.,தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை பழங்கா நத்தம் பைபாஸ் ரோடு ஜெயம் தியேட்டர் எதிரே பஸ் ஸ்டாப்பில் அ.தி.மு.க.,கொடிக் கம்பம் நட அனுமதிக்க உத்தரவிட அதன் நிர்வாகி கதிரவன் மனு தாக்கல் செய்தார். ஜன.27 ல் நீதிபதி ஜி.கே.இளந்திரையன்,'தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். 'மார்க்சிஸ்ட் கொடிக் கம்பங்களை அகற்றும் அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக் க வேண்டும்,' என அதன் மாநில செயலாளர் சண்முகம் மனு செய்தார். ஜூன் 20 ல் நீதிபதி சி.சரவணன் தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து சண்முகம் மேல்முறையீடு செய்தார். ஜூலை 22 ல் 3 நீதிபதிகள் அமர்வு, 'விருப்பமுள்ள கட்சிகள் இவ்வழக்கில் இணைத்துக் கொள்ள இடையீட்டு மனுக்களை ஆக.5 க்குள் தாக்கல் செய்ய வேண்டும். கொடிக் கம்ப பிரச்னையில் தற்போதைய நிலை தொடர வேண்டும்,' என உத்தரவிட்டு ஆக.6க்கு ஒத்திவைத்தனர்.
அ .தி.மு.க.,சார்பில் முன்னாள் அமைச்சர் உதய குமார்,'இவ்வழக்கில் எங்கள் கட்சியையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும். எங்கள் தரப்பு நிலைப்பாட்டை தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும்,' என இடையீட்டு மனு தாக்கல் செய் துள்ளார்.