/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீர் மோர் பந்தல் அகற்ற எதிர்ப்பு அ.தி.மு.க.,வினர் கைது
/
நீர் மோர் பந்தல் அகற்ற எதிர்ப்பு அ.தி.மு.க.,வினர் கைது
நீர் மோர் பந்தல் அகற்ற எதிர்ப்பு அ.தி.மு.க.,வினர் கைது
நீர் மோர் பந்தல் அகற்ற எதிர்ப்பு அ.தி.மு.க.,வினர் கைது
ADDED : ஏப் 23, 2025 04:07 AM
மதுரை : மதுரை விளாங்குடி தேசிய நெடுஞ்சாலையில் அ.தி.மு.க., சார்பில் ஏப்.,20ல் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். உரிய அனுமதியின்றி பந்தல் வைக்கப்பட்டதாகவும், அதை அகற்றுமாறும் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
அ.தி.மு.க.,வினர் அகற்றாததால் நேற்று மதியம் போலீஸ் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். வட்ட செயலாளர் சித்தன் தலைமையில் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
கட்சியினர் கூறுகையில், ''மதுரை நகர் முழுவதும் அனுமதியின்றி தி.மு.க.,வினர் நீர் மோர் பந்தல் வைத்துள்ளனர். மேற்கு தொகுதிக்குட்பட்ட விளாங்குடியில் மட்டும் பிரச்னையை கிளப்ப காரணம் அமைச்சர் மூர்த்தி.
மேற்கு தொகுதி பொறுப்பாளரான பிறகு அவர் துாண்டுதலின்பேரிலேயே இது நடந்துள்ளது. இதுகுறித்து பொதுச்செயலாளர் பழனிசாமி கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்'' என்றனர்.

