sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆதரவாளர்களுக்காக அழகிரி வைத்த வேண்டுகோள் ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு பின்னணி என்ன

/

ஆதரவாளர்களுக்காக அழகிரி வைத்த வேண்டுகோள் ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு பின்னணி என்ன

ஆதரவாளர்களுக்காக அழகிரி வைத்த வேண்டுகோள் ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு பின்னணி என்ன

ஆதரவாளர்களுக்காக அழகிரி வைத்த வேண்டுகோள் ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு பின்னணி என்ன


ADDED : ஜூன் 02, 2025 06:09 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'தி.மு.க.,வில் இருந்து தன்னுடன் சேர்ந்து நீக்கப்பட்ட ஆதரவாளர்களை மீண்டும் சேர்க்க கோரி 11 ஆண்டுகளுக்கு பின் மதுரை வீட்டிற்கு வந்த முதல்வர் ஸ்டாலினிடம், அழகிரி வேண்டுகோள் வைத்ததாக' ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக 2014ல் அழகிரியுடன் அவரது ஆதரவாளர்கள் பலர் நீக்கப்பட்டனர். கருணாநிதி மறைவுக்கு பின் ஸ்டாலினுக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்த அழகிரி தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களை சந்தித்தார். தனிக்கட்சி துவக்க ஆலோசித்தார். ஆனால் தேர்தலை சந்தித்து ஸ்டாலின் வெற்றி பெற்ற பின் அடுத்தடுத்த நிகழ்வுகளில் சமாதானம் ஆன அழகிரி அரசியலில் இருந்தே ஒதுங்கினார்.

அழகிரி மகன் தயாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, நலம் விசாரிக்க சென்றது முதல் அழகிரிக்கும் - ஸ்டாலினுக்கும் இடையே சுமூக உறவு ஏற்பட்டது. சமீபத்தில் கூட அழகிரி பேசிய வீடியோவில், 'என் தம்பி முதல்வர் மு.க. ஸ்டாலின்' என பெருமையாக குறிப்பிட்டார்.

இதற்கிடையே கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க மதுரை வந்த முதல்வர் ஸ்டாலினும், அழகிரி வீட்டிற்கு சென்றார். அவர்கள் சந்திப்பு அரை மணிநேரத்திற்கும் மேல் நீடித்தது. அப்போது அழகிரி ஆதரவாளர்களான முன்னாள் துணை மேயர் மன்னன் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ஸ்டாலினுடன் சந்திக்க அழகிரி ஏற்பாடு செய்திருந்தார். இதன்படி ஸ்டாலின் - அழகிரியுடன் அவர்கள் போட்டோவும் எடுத்துக்கொண்டனர். இதன்பின் நீக்கப்பட்டவர்கள் விரைவில் கட்சியில் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அழகிரி ஆதரவாளர் கூறியதாவது: இந்த சந்திப்பில் எங்களை மீண்டும் கட்சியில் சேர்க்க அழகிரி வேண்டுகோள் வைத்துள்ளார். ஏற்கனவே துணை முதல்வர் உதயநிதி ஒருமுறை அழகிரியை சந்திக்க வந்தபோதே, 'உங்க அப்பாவிடம் சொல்லி இவர்களை சேர்க்க சொல்லு' என அன்பு கட்டளையிட்டார். ஆனாலும் நடக்கவில்லை. அழகிரியிடம் அனுமதி பெற்று கட்சித் தலைமைக்கு மன்னிப்பு கடிதமும் அளித்தனர். அதில் 'இனிமேல் ஸ்டாலினுக்கு விசுவாசமாக இருப்போம்' என உறுதியளித்திருந்தனர்.

தற்போது 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அழகிரி வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் இரவு உணவு சாப்பிட்டார். இருவரும் மனம்விட்டு நீண்ட நேரம் பேசினர். எங்களை நீக்கி 11 ஆண்டுகளாகியும் நாங்கள் இதுவரை வேறு கட்சிக்கு செல்லவில்லை. தி.மு.க., விசுவாசிகளாகத்தான் உள்ளோம். அழகிரி இதை ஸ்டாலினிடம் எடுத்துக்கூறியிருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுக்குழு முடிந்த நிலையில் விரைவில் கட்சியில் இருந்து அழைப்பை எதிர்பார்க்கிறோம் என்றனர்.






      Dinamalar
      Follow us