sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மனைவியை கொலை செய்து விட்டு குடும்பத்தினரிடம் நாடகமாடிய கணவர் வழுக்கி விழுந்தது போல் 'செட்டப்' செய்தது அம்பலம்

/

மனைவியை கொலை செய்து விட்டு குடும்பத்தினரிடம் நாடகமாடிய கணவர் வழுக்கி விழுந்தது போல் 'செட்டப்' செய்தது அம்பலம்

மனைவியை கொலை செய்து விட்டு குடும்பத்தினரிடம் நாடகமாடிய கணவர் வழுக்கி விழுந்தது போல் 'செட்டப்' செய்தது அம்பலம்

மனைவியை கொலை செய்து விட்டு குடும்பத்தினரிடம் நாடகமாடிய கணவர் வழுக்கி விழுந்தது போல் 'செட்டப்' செய்தது அம்பலம்


ADDED : ஜூன் 10, 2025 03:02 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 03:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் மனைவியை வெட்டிக்கொலை செய்து மகன், மகளிடம் 'அம்மா வழுக்கி விழுந்து இறந்து விட்டாள்' என நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர்.

கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமரத்தினம் 60. இவரது மனைவி மீனலோச்சனி 55. மகன், மகள் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். பிளம்பரான ராமரத்தினம் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்தார். கோபித்துக்கொண்டு மகன் வீட்டிற்கு மீனலோச்சனி அடிக்கடி செல்வதும், அவரை சமரசம் செய்து ராமரத்தினம் அழைத்து வருவதும் வழக்கம். ஆறு மாதங்களுக்கு முன் தன்னை அடித்ததாக தல்லாகுளம் மகளிர் போலீசில் மீனலோச்சனி புகார் கூற ராமரத்தினத்தை போலீசார் கண்டித்தனர்.

பத்து நாட்களுக்கு முன் கணவரால் தாக்கப்பட்டதில் கையில் எலும்புமுறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் மீனலோச்சனி சிகிச்சை பெற்றார். நேற்று முன்தினம் வீட்டில் அவர் வழுக்கி விழுந்து இறந்ததாக ராமரத்தினம் தெரிவித்தார். மகன், மகள் குடும்பத்துடன் வந்தனர். மீனலோச்சனி நெற்றியில் ஒரு ரூபாய் காசு வைத்து, உடைத்த தேங்காயை அருகில் வைத்து ராமரத்தினம் சோகத்துடன் இருந்தார்.

மீனலோச்சனியின் தலையை தொட்டு மருமகள் உமா மகேஸ்வரி அழுதபோது, பின்னந்தலையில் வெட்டுக்காயம் இருந்ததை பார்த்தார். ராமரத்தினத்திடம் கேட்டபோது, 'சாப்பாடு போடும் போது தலை கதவில் முட்டி ரத்தம் வந்தது. எழுப்பியும் அவள் எழுந்திருக்கவில்லை' என்றார். இறப்பில் சந்தேகம் இருப்பதாக மகன் பிரபாகரன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில், தலையில் வெட்டியதால் இறந்தது உறுதியானது.

கொலையை மறைக்க மனைவி வழுக்கி விழுந்தது போல் 'செட்டப்' செய்து ராமரத்தினம் நாடகமாடியதும் தெரிந்தது. கொலை வழக்காக மாற்றி அவரை எஸ்.ஐ., அதிகுந்தகண்ணன் கைது செய்தார்.






      Dinamalar
      Follow us