sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் உயிரை காப்பாற்ற சென்ற '108' ஊழியர்களின் உயிரை பறிக்க முயற்சி

/

மதுரையில் உயிரை காப்பாற்ற சென்ற '108' ஊழியர்களின் உயிரை பறிக்க முயற்சி

மதுரையில் உயிரை காப்பாற்ற சென்ற '108' ஊழியர்களின் உயிரை பறிக்க முயற்சி

மதுரையில் உயிரை காப்பாற்ற சென்ற '108' ஊழியர்களின் உயிரை பறிக்க முயற்சி

1


ADDED : செப் 18, 2024 09:18 PM

Google News

ADDED : செப் 18, 2024 09:18 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை காப்பாற்ற வந்த, 108 ஆம்புலன்ஸ் பெண் ஊழியர், டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கல் வீசப்பட்டதில் ஆம்புலன்ஸ் முன்புற கண்ணாடி சேதமடைந்தது.

மதுரை, கோச்சடை நடராஜ் நகரில் திங்கட்கிழமை இரவு, வீட்டில் தன் சகோதரர் கணேசன் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக 108 ஆம்புலன்சிற்கு அவரது சகோதரி முருகேஸ்வரி தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற மருத்துவ உதவியாளர் தேவதா, 36, டிரைவர் அருண்குமார், 32, ஆகியோர் முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டனர். அங்கிருந்த அவரது மகன், தந்தையை ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நோயாளியின் உடல்நிலையை கருத்திற்கொண்டு அழைத்துச் செல்ல முயன்றபோது, ஆத்திரமுற்ற மகன் கல்வீசி தாக்கினார். சுதாரித்துக் கொண்ட இருவரும் ஒதுங்கிக் கொள்ள ஆம்புலன்ஸ் முன்புற கண்ணாடியை ஒரு கல் உடைத்தது.

தாக்குதலில் காயமடைந்த தேவதா, அருண்குமார் போலீசிற்கும், தங்களது சக தொழிலாளர்களுக்கும் தகவல் தெரிவிக்க, மற்றொரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தகவல் அறிந்த 108 ஊழியர்கள், ஆம்புலன்ஸ்களோடு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தினர். காலையில் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கிளம்பி சென்றனர்.

நேற்று முன்தினம் காலை தனியார் நிதி நிறுவன ஊழியரான சரவணகுமார், 30, என்பவரை எஸ்.எஸ்., காலனி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us