ADDED : ஆக 31, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ் ஆர்.எம்.எஸ்.
காலனி கற்பக விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. இங்கு 3 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. வருடாபிஷேக விழாவில் விக்னேஸ்வர பூஜை, புண்யகாவாசனம், பஞ்சகவ்ய, யாக பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஏற்பாடுகளைச் செய்தனர்.
