UPDATED : ஆக 31, 2026 07:20 PM
ADDED : ஆக 31, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
மேலுார் : மேலுாரில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட தலைவர் நுார்முகமது தலைமை வகித்தார். கட்சியின் பார்லிமென்ட் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது உத்தரகாண்ட் போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து கோஷமிட்டனர். நகர் தலைவர் மகாதேவன், செயலாளர்கள் ராஜ்கபூர், லிபாஸ்சேக், வழக்கறிஞர் துரைப்பாண்டி, வட்டார தலைவர் பொன் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
