sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு

/

ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு

ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு

ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு


ADDED : அக் 29, 2024 05:24 AM

Google News

ADDED : அக் 29, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை ரயில்வே கோட்டத்தில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ரயில்வேயில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை செயல்படுகிறது. இத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அக்., மாதத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அக். 28 முதல் நவ. 3 வரை 'ஊழல் தடுப்பு விழிப்புணர்வு' வாரம் அனுசரிக்கப்படுகிறது.

நேற்று (அக். 28) கோட்ட அலுவலகத்தில்நடந்த முதல் நாள் நிகழ்வில் கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமை வகித்தார். அதிகாரிகள், ஊழியர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு, ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் ராவ், வேக சக்தி முதன்மை திட்டம் மேலாளர் ஹரிக்குமார், கோட்ட ஊழியர் நல அதிகாரி சங்கரன் பங்கேற்றனர்.

மதுரை கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள், ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனைகள் ஆகியவற்றில் உள்ள ரயில்வே ஊழியர்களும் ஊழல் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us