sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மொபசல் பஸ்களுக்கும் இ சேவை மையத்தில் டிக்கெட் பெற ஏற்பாடு

/

மொபசல் பஸ்களுக்கும் இ சேவை மையத்தில் டிக்கெட் பெற ஏற்பாடு

மொபசல் பஸ்களுக்கும் இ சேவை மையத்தில் டிக்கெட் பெற ஏற்பாடு

மொபசல் பஸ்களுக்கும் இ சேவை மையத்தில் டிக்கெட் பெற ஏற்பாடு


ADDED : ஏப் 04, 2025 05:11 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் விரைவு பஸ்களுக்கு இணைய தளம் மூலம் முன்பதிவு வசதி உள்ளது. இதனைப் பயன்படுத்தி பலரும் வீடுகளில் இருந்தே ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்வதால் தற்போது பஸ் ஸ்டாண்ட் கவுண்டர்களில் பயணிகள் கூட்டம் குறைந்துவிட்டது.

அடுத்த கட்டமாக இந்த வசதி அரசு போக்குவரத்து சாதாரண மொபசல் பஸ்களுக்கும் வந்துவிட்டது. இதனால் நெடுந்துார பஸ்களுக்கு இந்த வசதியை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். உதாரணமாக மதுரையில் இருந்து சென்னை, நெல்லை, நாகர்கோவில், கோவை உட்பட பல ஊர்களுக்கும் இந்த வசதி உள்ளது. இதனால் விசேஷ காலங்களில் பயணிகள் டிக்கெட்டுகளுக்காக ஒரே இடத்தில் குவிவது தவிர்க்கப்படுகிறது.

இதற்கும் அடுத்த கட்டமாக இந்த டிக்கெட் பதிவு இ சேவை மையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காக மதுரை உட்பட அனைத்துக் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் 'எல்காட்' அமைப்பில் இருந்து தொழில்நுட்ப விவரங்களை கேட்டுப் பெற்றுள்ளனர்.

மதுரை போக்குவரத்து கழக அலுவலர் ஒருவர் கூறுகையில், ''விரைவில் நெடுந்தொலைவு பஸ்களில் செல்ல விரும்பும் பொதுமக்கள் இ சேவை மையங்களிலேயே டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது'' என்றார்.






      Dinamalar
      Follow us