
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு: பாலமேடு மகுடேஸ்வரன் 21. தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் மாலை அப்பகுதி கண்மாய் கரை மெயின் ரோட்டில் நின்றிருந்தார். பள்ளி முடிந்து சைக்கிளில் வந்த 14 வயது சிறுமியை வழிமறித்து தன் நண்பன் செல்வகுமாரை பிடிக்குமா எனக் கேட்டுள்ளார்.
எனக்கு யாரையும் தெரியாது என்று கூறிச் சென்ற சிறுமியை சைக்கிளிலிருந்து கீழே தள்ளி கையை பிடித்து தவறாக நடக்க முயன்றுள்ளார். அவ்வழியாக வந்தவர்கள் சிறுமியை மீட்டனர்.
தப்பிய மகுடேஸ்வரனை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் உஷாராணி புகாரில் சமயநல்லுார் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ'வில் கைது செய்தனர்.

