/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியில் புகார் கூறிய மாணவனின் சித்தப்பா மீது தாக்குதல்
/
மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியில் புகார் கூறிய மாணவனின் சித்தப்பா மீது தாக்குதல்
மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியில் புகார் கூறிய மாணவனின் சித்தப்பா மீது தாக்குதல்
மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியில் புகார் கூறிய மாணவனின் சித்தப்பா மீது தாக்குதல்
UPDATED : நவ 21, 2024 05:15 AM
ADDED : நவ 21, 2024 01:22 AM

மதுரை: மதுரை நகரில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 மாணவர்கள் குறித்து புகார் கூறிய சக மாணவனின் சித்தப்பாவை தலைமையாசிரியை முன்பே மாணவர்கள் கடுமையாக தாக்கினர். இதன்பின்னணியில் 'கூல் லிப்' பயன்பாடே காரணம் என தெரியவந்துள்ளது.
மதுரை பனங்காடி பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர், அருகேயுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்துவருகிறார். சில நாட்களாக அவரை சக மாணவர்கள் சிலர் கேலி, கிண்டல் செய்ததோடு அநாகரிக செயல்களிலும் ஈடுபட்டனர்.
இதனால் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என பெற்றோரிடம் மாணவர் கூறினார். அம்மாணவர்கள் குறித்து தலைமையாசிரியையிடம் தந்தையும், சித்தப்பாவும் நேரில் புகார் கூறினர். தலைமையாசிரியை அறையில் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடந்தது.
அப்போது சித்தப்பா ஒரு மாணவனை தாக்க, ஆத்திரமுற்ற சக மாணவர்கள் அவரை கடுமையாக தாக்கினர்.
அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியை இருதரப்பையும் கண்டித்தார். தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த போலீசாரிடம் 'மாணவர்கள் கூல் லிப் பயன்படுத்துவதே இதுபோன்ற பிரச்னைக்கு காரணம். அதை தடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 'கவுன்சிலிங்' கொடுக்கப்பட்டது. தலைமையாசிரியை புகாரில் மாணவனின் சித்தப்பாவிடம் போலீசார் விசாரித்தனர். அவர் மன்னிப்பு கேட்டதால் புகார் வாபஸ் பெறப்பட்டது.
போலீசார் கூறியதாவது: பள்ளி, கல்லுாரி அருகில் தடைசெய்யப்பட்ட கூல் லிப் போன்ற புகையிலை பொருட்கள் விற்கப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்கள் தாக்குதல் சம்பவத்திற்குபிறகு அப்பள்ளி பகுதி கடைகளில் சோதனை செய்து கூல் லிப் விற்கப்படுவதில்லை என உறுதிசெய்தோம். பள்ளிக்கு வரும்போதே வேறு பகுதிகளில் வாங்கி வந்து பயன்படுத்துகிறார்கள். இதை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.