/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பந்தல்கால் நடும் விழா
/
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பந்தல்கால் நடும் விழா
ADDED : ஜன 03, 2025 02:03 AM

அவனியாபுரம்: அவனியாபுரத்தில் ஜன. 14ல் நடக்க உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக திருப்பரங்குன்றம் -ரோட்டில் தற்காலிக வாடிவாசல் அமைக்கப்படுவதற்காக பூமி பூஜை, பந்தல்கால் நடும் பணிகள் நேற்று நடந்தது.
அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். மேயர் இந்திராணி பொன்வசந்த், கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், உதவி கலெக்டர் வைஷ்ணவி பால், பூமிநாதன் எம்.எல்.ஏ., டி.ஆர்.ஓ., சக்திவேல், கால்நடை துறை இணை இயக்குனர் சுப்பையன், உதவி இயக்குனர்கள் பழனிவேல், சரவணன், மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா, தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், துணைச் செயலாளர் பாலாஜி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் விமல் பங்கேற்றனர்.