ADDED : செப் 09, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி., தேவநாதன் உத்தரவின் பேரில், தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் சைபர் இணையவழி குற்றங்கள் தடுப்பு, உணவுப் பாதுகாப்பு தடுப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
அவனியாபுரம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் நடந்த முகாமுக்கு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கர்ணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கவிதா முன்னிலை வகித்தார். மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,நாகராஜன் சிறப்புரை யாற்றினார். சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி.,சந்திரகுமார் 3 வகை டிஜிட்டல் மோசடி குறித்து பேசினார்.
