ADDED : செப் 10, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இதில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பால்வினை நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒருபகுதியாக எச்.ஐ.வி., பரிசோதனைக்கான கியூ.ஆர்., கோடை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து மாணவர்கள் பங்கேற்ற மனிதசங்கிலி, தாரைதப்பட்டையுடன் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆட்டோவில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. மாணவர்கள், அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
