UPDATED : ஆக 16, 2026 04:02 PM
ADDED : ஆக 16, 2026 03:51 PM
அ நிறம் | அளவு
மதுரை:மதுரையில் போதை எதிர்ப்பு சமூகநலப் பேரவை சார்பில் இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர் ராஜ்குமார், செஞ்சிலுவை சங்க முன்னாள் செயலாளர் கோபாலகிருஷ்ணன், இளஞ்செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.
காந்தி மியூசியம் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக அய்யர் பங்களா வரை சென்றனர். இந்தியன் வங்கி கிளை மேலாளர் அழகப்பன் வரவேற்றார். தன்னார்வலர்கள் மூகாம்பிகை, ஸ்டாலின், சீனிவாசன், காந்திய சிந்தனையாளர் கீர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
