ADDED : அக் 19, 2025 03:37 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: கள்ளிக்குடி தீயணைப்பு நிலைய எல்லைக்குட்பட்ட சிவரக்கோட்டை பகுதியில் உள்ள கோத்தாரி பள்ளியில் விபத்தில்லா தீபாவளி என்ற விழிப்புணர்வு பிரசாரம் கள்ளிக்குடி நிலைய அலுவலர் வரதராஜன் தலைமையில் நடந்தது.
பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் விபத்தில்லா தீபாவளிக்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
