ADDED : மார் 06, 2024 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உபகோயிலான வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில் ராஜகோபுரம் அமைக்கும் பணிக்காக பாலாலயம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது.
இக்கோபுரம் மூன்று படிநிலையில் அமைகிறது. இதற்காக உபயதாரர் ரூ.51.80 லட்சம் வழங்கியுள்ளார். அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை, துணை கமிஷனர் கலைவாணன், மண்டல செயற்பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பாளர் முருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா, மாநகராட்சி கவுன்சிலர் துரைப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

