ADDED : மே 01, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் திருமங்கலம் பாத்திமா கல்லுாரி சார்பில் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் விழா நடந்தது.
ஆய்வறிஞர் சோமசுந்தரி வரவேற்றார். இயக்குநர் அவ்வை அருள் தலைமை வகித்தார். விசாலாட்சி 'பாரதிதாசனின் கவியமுது' என்ற தலைப்பில் பேசியதாவது: கவிதைகளால் தமிழுக்கு வளம் சேர்த்தவர் பாரதிதாசன். பெண்கல்வி, பெண்ணுரிமை, பெண் விடுதலையைப் பாடியவர், குழந்தை மணம், பொருந்தா மணம் எதிர்த்தல், விதவை மணத்தை ஆதரித்தல் போன்றவற்றை இவரது கவிதைகளில் காணலாம் என்றார்.
ராமநாதபுரம் அலங்கானுார் அரசுப்பள்ளி ஆசிரியர் செந்தில்குமார், இளங்கோவன் கார்மேகம், தமிழ்மொழி, சுகுமாரி, நாவினி நுாலாய்வு செய்தனர். ஆய்வு வளமையர் ஜான்சிராணி நன்றி கூறினார்.

