நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : பரவை பேரூராட்சியில் அண்ணா நகர், ஊர்மெச்சிகுளம் பகுதியில் பஸ் ஸ்டாப் கட்டவும், காந்தி சிலை கட்டட மேற்கூரைகள் பராமரிப்பு பணிக்கும் பூமி பூஜை நடந்தது.பேரூராட்சி தலைவர் கலா மீனா தலைமை வகித்தார்.
அ.தி.மு.க., பேரூர் செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். துணை தலைவர் ஆதவன், கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ துவக்கி வைத்தார்.

