ADDED : ஜூன் 29, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: செல்லம்பட்டியில் பா.ஜ., சார்பில் காங்., ஆட்சி காலத்தில் இந்திரா கொண்டு வந்த எமர்ஜென்சி எனும் அவசர நிலை பிரகடனப்படுத்திய நாளின் 50வது ஆண்டு இருண்ட நினைவு தின கருத்தரங்கு மாவட்டத்தலைவர் சிவலிங்கம் தலைமையில் நடந்தது.
துணைத்தலைவர் வெற்றிச்செல்வி வரவேற்றார். பெருங்கோட்டப் பொறுப்பாளர் கதலி நரசிங்கப்பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினரும், விருதுநகர் மாவட்ட பார்வையாளருமான வெற்றிவேல், மாவட்ட நிர்வாகிகள் ரஞ்சித்குமார், ராக்கப்பன், ராஜரத்தினம், இன்பராணி பங்கேற்றனர்.