ADDED : ஆக 16, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாநகராட்சி முன்னாள் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மணியம்மை ஆக.15ல் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அவரது உடலை மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு , மருத்துவம் பயிலும் மாணவர்கள் பயன்பெறும்வகையில் உடல் தானம் தர குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து மணியம்மையின் உடல் இறுதி மரியாதை செய்யப்பட்டு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
