/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஆறு பேருக்கு வாழ்வளித்தார்
/
மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஆறு பேருக்கு வாழ்வளித்தார்
மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஆறு பேருக்கு வாழ்வளித்தார்
மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஆறு பேருக்கு வாழ்வளித்தார்
ADDED : ஜன 15, 2026 06:45 AM

மதுரை: மதுரை கே.புதுாரைச் சேர்ந்த சதீஷ்குமார் 31, விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு 6 பேருக்கு பொருத்தப்பட்டன.
அழகர்கோவில் அருகே டூவீலரில் ஜன. 9ல் சதீஷ்குமார் சென்றபோது கீழே விழுந்ததில் காயம்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜன. 11 இரவு 9:17 மணிக்கு மூளைச்சாவு நிலையை அடைந்ததால் அவரது உடல் உறுப்புகளை தானமாக தர மனைவி அனிதாராணி சம்மதம் தெரிவித்தார்.
கல்லீரல் எடுக்கப்பட்டு திருச்சி சீனிவாசா மருத்துவமனைக்கும் ஒரு சிறுநீரகம் தென்னுார் காவேரி மருத்துவ மையத்திற்கும் அனுப்பப்பட்டன. மற்றொரு சிறுநீரகம், கருவிழிகள், தோல் மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. அரசு இறுதி மரியாதைக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

