ADDED : அக் 12, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உத்தப்பநாயக்கனூர் இந்திரா நகர் காலனியைச் சேர்ந்தவர் காமாட்சி 55.
கொத்தனார். வீட்டில் முதல் மாடி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று மாலை 6:00 மணியளவில் பணி முடிந்தபின் கட்டடத்தின் மேல் இருந்த இரும்பு கம்பிகளை ஒதுங்க வைத்த போது, அருகில் இருந்த மின்சார கம்பியில் பட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். உத்தப்பநாயக்கனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.