ADDED : பிப் 18, 2024 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் அருகே வெள்ளரிப்பட்டியில் அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களை சேர்ந்தவர்கள் இரண்டு அறைகளில் தனித்தனியாக தங்கி தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்குள் புத்தாண்டு கொண்டாடியது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. பிப்., 9 அறையில் தனியாக இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த தேபாருவை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் பாலகிருஷ்ணா காதர்கா 32, தபாஸ் காதர்கா 30, தாக்கியதில் இறந்தார். பாலகிருஷ்ணா காதர்கா உள்ளிட்ட 2 பேரும் ஒடிசா மாநிலத்திற்கு தப்பினர்.
போலீசார் ஒடிசா சென்று இருவரையும் கைது செய்து மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.