/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரோட்டில் புதைந்த பஸ் போக்குவரத்து பாதிப்பு
/
ரோட்டில் புதைந்த பஸ் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 03, 2025 03:27 AM

சோழவந்தான்: விக்கிரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே சந்திப்பில் பஸ்சின் முன்புற சக்கரம் ரோட்டில் புதைந்ததால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதித்தது.
அப்பகுதியைச் சேர்ந்த பாண்டி கூறியதாவது: இப்பகுதி குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி பத்து நாட்களாக நடக்கிறது. இதனால் ரோடு மிக மோசமான நிலையில் உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாமல், மக்கள் நடக்க முடியாமல் தடுமாறி விழும் நிலை உள்ளது.
நேற்று காலை இந்த சந்திப்பு ரோட்டில் உசிலம்பட்டி பஸ்சின் சக்கரங்கள் சரிவர மூடப்படாத மணலில் புதைந்து கொண்டது. பஸ்சை நகர்த்த முடியாததால், அந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மதுரை, நிலக்கோட்டை, வத்தலகுண்டு செல்லும் பஸ்கள் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமம் அடைந்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் மண் அள்ளும் இயந்திரம் உதவியுடன் பஸ் மீட்கப்பட்டதால் போக்குவரத்து சரியானது. இந்த ரோட்டை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றார்.