/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
18 பேர் இறந்த வழக்கில் பஸ் டிரைவருக்கு 6 ஆண்டு சிறை
/
18 பேர் இறந்த வழக்கில் பஸ் டிரைவருக்கு 6 ஆண்டு சிறை
18 பேர் இறந்த வழக்கில் பஸ் டிரைவருக்கு 6 ஆண்டு சிறை
18 பேர் இறந்த வழக்கில் பஸ் டிரைவருக்கு 6 ஆண்டு சிறை
ADDED : மார் 19, 2026 05:21 AM
திருமங்கலம்: மதுரை மாவட்டம் கப்பலுார்- மாட்டுத்தாவணி ரிங் ரோட்டில், பரம்புப்பட்டி அருகே 2009ல் மினி வேன் மீது பஸ் மோதி 18 பேர் இறந்த விபத்தில் பஸ் டிரைவருக்கு 6 ஆண்டுகள் தண்டனை விதித்து திருமங்கலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் ஆறுமுக கனி, பாலவநத்தம் தெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 18 பேரை தொண்டிக்கு கட்டிட வேலைக்காக மினி வேனில் அழைத்துச் சென்றார். ரிங் ரோட்டில் பரம்புபட்டி அருகே வலையப்பட்டி சந்திப்புக்கு முன்பு உள்ள வளைவில் திரும்பும்போது, மதுரையில் இருந்து திருமங்கலம் பகுதிக்கு வந்த தனியார் பஸ் மோதியது. இதில் மினி வேனில் பயணம் செய்த கருப்பாயி, அம்சவள்ளி, செல்வகுமரன் உள்ளிட்ட 18 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இது குறித்த வழக்கு திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் நடந்து வந்தது.
தனியார் பஸ் டிரைவர், விருதுநகர் மாவட்டம் பாவாளி பகுதியைச் சேர்ந்த பாலமுருகனுக்கு 44, பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆறு ஆண்டுகள் தண்டனை வழங்கி நீதிபதி செல்வகுமார் உத்தரவிட்டார்.

