sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கால்வாயில் தடுப்பு: விவசாயிகள் கடுப்பு

/

 கால்வாயில் தடுப்பு: விவசாயிகள் கடுப்பு

 கால்வாயில் தடுப்பு: விவசாயிகள் கடுப்பு

 கால்வாயில் தடுப்பு: விவசாயிகள் கடுப்பு


ADDED : டிச 04, 2025 07:04 AM

Google News

ADDED : டிச 04, 2025 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: 'சோழவந்தான் அருகே சித்தாலங்குடியில் பாசன உபரிநீர் கால்வாயில் அனுமதியின்றி வைத்த தடுப்புகளை அகற்ற வேண்டும்' என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயி ராஜகோபாலன் கூறியதாவது: சித்தாலங்குடி, ஆனைக்குளம் கண்மாய்களில் வெளியேறும் உபரி நீர், கால்வாய் வழியே தோடனேரிக் கண்மாய்க்குச் செல்கிறது. ஆத்திமரத்தான் கோயில் பகுதி கால்வாயில் விவசாயிகள் பலர் அனுமதியின்றி பல இடங்களில் செயற்கை தடுப்புகளை ஏற்படுத்தி, தங்கள் விவசாய நிலங்களுக்கு தண்ணீரை திருப்புகின்றனர்.

இதனால் தண்ணீர் எளிதாக செல்ல முடியாமல் தேங்குகிறது.

பிற பகுதி நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீரும் இக்கால்வாயிலேயே சேருகிறது. தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டதால் மழைக்காலங்களில் சாகுபடி நிலங்களில் பெய்யும் அதிக மழை நீர் வெளியேற முடியாமல் வயலிலேயே தேங்குகிறது. இதனால் பயிர்கள் சேதம் அடைந்து நஷ்டம் ஏற்படுகிறது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us