ADDED : டிச 14, 2024 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: நாமக்கல் மாவட்டம் மோகனுார் பாக்கியராஜ் 42. இவரது உறவினர்கள் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று காலை மருத்துவமனையில் இருந்து திருமங்கலத்திற்கு அவர் நான்கு வழிச்சாலையில் சென்றார். கப்பலுார் டோல்கேட்டை கடந்தவுடன் மழை காரணமாக ரோடு வழுக்கியதில், கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர தடுப்பில் மோதியது.
இதில் கார் துாக்கி வீசப்பட்டு சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் காயங்களோடு பாக்கியராஜ் தப்பினார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

