sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாநகராட்சியுடன் ஊராட்சி இணைப்பிற்கு எதிராக வழக்கு

/

மாநகராட்சியுடன் ஊராட்சி இணைப்பிற்கு எதிராக வழக்கு

மாநகராட்சியுடன் ஊராட்சி இணைப்பிற்கு எதிராக வழக்கு

மாநகராட்சியுடன் ஊராட்சி இணைப்பிற்கு எதிராக வழக்கு


ADDED : பிப் 02, 2025 04:50 AM

Google News

ADDED : பிப் 02, 2025 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மதன்குமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சி உள்ளிட்ட 16 ஊராட்சிகள், பரவை பேரூராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைக்க தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை (தேர்தல் பிரிவு) டிச.31 ல் அரசாணை பிறப்பித்தது.

விதிமுறைகளை பின்பற்றவில்லை. அரசாணை பிறப்பிக்க அத்துறைக்கு அதிகாரம் இல்லை. கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் பிறப்பித்தது ஏற்புடையதல்ல. ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் அரசாணைக்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார். மாநகராட்சி தரப்பு: அரசிடம் ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதை தவிர்த்து முன்கூட்டியே இங்கு மனு செய்தது ஏற்புடையதல்ல. இவ்வாறு தெரிவித்தது. நீதிபதி பிப்.7 க்கு ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us