sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிராக வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

/

மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிராக வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிராக வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிராக வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு


UPDATED : மே 30, 2025 07:19 AM

ADDED : மே 30, 2025 06:10 AM

Google News

UPDATED : மே 30, 2025 07:19 AM ADDED : மே 30, 2025 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திருச்சி மாநகராட்சியுடன் குண்டூர் ஊராட்சியை இணைப்பதற்கு எதிரான வழக்கில், 'இதில் அரசு இறுதி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன் மக்களின் ஆட்சேபனைகளை பரிசீலிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருவெறும்பூர் அருகே குண்டூர் மரிய மைக்கேல் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்சி மாநகராட்சியுடன் குண்டூர் ஊராட்சியை இணைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. குண்டூர் முழுமையான விவசாய கிராமம். இதை மாநகராட்சியுடன் இணைத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஜன.,26ல் நடந்த கிராம சபை கூட்டத்தில் ​மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மைச் செயலர், கலெக்டருக்கு ஆட்சேபனை மனு அனுப்பினோம். பரிசீலிக்கவில்லை. நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார் அமர்வு: மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசு தற்காலிக அடிப்படையில் மட்டுமே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மனுதாரர் மற்றும் கிராமத்தின் பிறர் சமர்ப்பித்த ஆட்சேபனைகளை கவர்னரின் முதன்மைச் செயலருக்கு அனுப்ப வேண்டும். பின் இறுதி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு, மனுதாரர் மற்றும் கிராமத்தின் பிறரது ஆட்சேபனைகளை சட்டப்படி பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us