sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் குடியிருப்போர் சங்க நிர்வாகியின் வீடு புகுந்து தாக்குதல்; தி.மு.க., கவுன்சிலர் கணவர் மீது வழக்கு; பதவி பறிப்பு

/

மதுரையில் குடியிருப்போர் சங்க நிர்வாகியின் வீடு புகுந்து தாக்குதல்; தி.மு.க., கவுன்சிலர் கணவர் மீது வழக்கு; பதவி பறிப்பு

மதுரையில் குடியிருப்போர் சங்க நிர்வாகியின் வீடு புகுந்து தாக்குதல்; தி.மு.க., கவுன்சிலர் கணவர் மீது வழக்கு; பதவி பறிப்பு

மதுரையில் குடியிருப்போர் சங்க நிர்வாகியின் வீடு புகுந்து தாக்குதல்; தி.மு.க., கவுன்சிலர் கணவர் மீது வழக்கு; பதவி பறிப்பு


ADDED : அக் 15, 2025 07:06 AM

Google News

ADDED : அக் 15, 2025 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் குடியிருப்பு பகுதியில் பூங்கா அமைப்பது தொடர்பாக அப்பகுதியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தி.மு.க., மாநகராட்சி கவுன்சிலர் அமுதாவின் கணவர் தவமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரது பகுதி செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

மதுரை பைபாஸ் ரோட்டில் வேல்முருகன் நகர் உள்ளது. இதன் குடியிருப்பு சங்கத்திற்கான தேர்தல் கடந்த ஜூனில் நடந்தது. இதில் தி.மு.க., வார்டு கவுன்சிலரான அமுதாவின் கணவரும், பகுதி செயலாளருமான தவமணி அனைத்து பதவிகளுக்கும் சிலரை வேட்பாளராக நிறுத்தி தோல்வியை தழுவினார்.

அன்று முதல் குடியிருப்பு சங்க நிர்வாகிகளுடன் தவமணி மோதல் போக்கை கையாண்டார்.

வேல்முருகன் நகரில் 20 ஆண்டுகளாக பொது பாதையாக இப்பகுதி மக்கள் பயன்படுத்தும் மாநகராட்சி இடத்தில் கவுன்சிலர் அலுவலகம் கட்ட ஏற்பாடு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டத்தை கிடப்பில் போட்டார்.

பின்னர் அந்த இடத்தில் சிறுவர் பூங்கா அமைக்க ஏற்பாடு செய்தார். இதற்கு சங்க நிர்வாகிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தடை பெற்றனர். இதை மீறி தவமணி, கவுன்சிலர் அமுதா உள்ளிட்டோர் பூமி பூஜை செய்ய வந்தபோது ஒருங்கிணைப்பாளர் பழனிகுமார் தலைமையில் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவ்விவகாரம் குறித்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து தி.மு.க., அரசை விமர்சித்தனர்.

இதனால் ஆத்திரமுற்ற தவமணி, தனது ஆதரவாளர்களுடன் பழனிகுமார் வீட்டினுள் புகுந்து அவரையும், மனைவியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுதொடர்பாக தவமணி மீது பெண் வன்முறை தடுப்புச்சட்டத்தின்கீழும், வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், பெண் மீது தாக்குதல், மிரட்டுதல், காயம் ஏற்படுத்துதல் உட்பட 5 பிரிவுகளின்கீழும் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைதொடர்ந்து சம்மட்டிபுரம் பகுதி கழக செயலாளர் பதவியில் இருந்து தவமணியை தி.மு.க., தலைமை நீக்கியது.






      Dinamalar
      Follow us