/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரம்மோற்ஸவம் நீட்டிக்க வழக்கு
/
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரம்மோற்ஸவம் நீட்டிக்க வழக்கு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரம்மோற்ஸவம் நீட்டிக்க வழக்கு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரம்மோற்ஸவம் நீட்டிக்க வழக்கு
ADDED : ஜூன் 02, 2025 11:14 PM
மதுரை: சென்னை வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் முறைப்படி பிரம்மோற்ஸவம் விழாவை 10 நாட்கள் நடத்த வேண்டும்.
ஆனால் ஜூன் 3 முதல் ஜூன் 5 வரை மட்டுமே நடத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பக்தர்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. விழாவை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: பிரம்மோற்ஸவ விழாவை 6 ஆண்டுகளாக நடத்தவில்லை என்கிறீர்கள். தற்போது கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்துள்ளீர்கள். முன்கூட்டியே மனு செய்திருக்கலாமே.
மனுதாரர் தரப்பு: தற்போதுதான் விபரம் தெரியவந்தது.
கோயில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினேன்.
நீதிபதிகள்: கோயில் நிர்வாகம் தரப்பில் அதன் வழக்கறிஞர் விபரம் பெற்று இன்று (ஜூன் 3) தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.