sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தேனீ வளர்ப்பு பெட்டிகள் கொள்முதல் செய்ய வழக்கு

/

தேனீ வளர்ப்பு பெட்டிகள் கொள்முதல் செய்ய வழக்கு

தேனீ வளர்ப்பு பெட்டிகள் கொள்முதல் செய்ய வழக்கு

தேனீ வளர்ப்பு பெட்டிகள் கொள்முதல் செய்ய வழக்கு


ADDED : ஆக 28, 2025 11:36 PM

Google News

ADDED : ஆக 28, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தேனீ வளர்ப்பு பெட்டிகள் கொள்முதல் செய்ய தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் ராமராஜபுரம் முருகன் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழகத்தில் தேனீ வளர்ப்பு திட்டம் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு மானிய விலையில் தேனீ வளர்ப்பு (பெட்டிகள்) கூடுகள் வழங்கப்படுகிறது. பிற மாநிலங்கள் பயனாளிகளை அடையாளம் கண்டுள்ளன.

அவர்களுக்கு வழங்க தேனீ வளர்ப்பு பெட்டிகள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது. குறைந்த தொகை கோரிய நிறுவனத்திற்கு டெண்டர் அனுமதிக்கப்பட்டது.

தமிழகத்தில் டெண்டர் நடத்தாமல் கொள்முதல் செய்ய சிலருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் இ-டெண்டர் நடத்தி தேனீ வளர்ப்பு பெட்டிகளை கொள்முதல் செய்து வினியோகிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் பயனாளிகள், ஒப்பந்தாரர்கள் விபரங்களை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜரானர். நீதிபதிகள் மத்திய, மாநில வேளாண்துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தர விட்டனர்.






      Dinamalar
      Follow us