sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம்; மாடு வளர்ப்போர் வலியுறுத்தல்

/

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம்; மாடு வளர்ப்போர் வலியுறுத்தல்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம்; மாடு வளர்ப்போர் வலியுறுத்தல்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம்; மாடு வளர்ப்போர் வலியுறுத்தல்


ADDED : ஜன 01, 2025 06:33 AM

Google News

ADDED : ஜன 01, 2025 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம் : ''தை முதல்நாள் அன்று அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'' என மாடு வளர்ப்போர் , மாடுபிடி வீரர்கள் கோரியுள்ளனர்.

அவனியாபுரம் சுற்றிலும் உள்ள பகுதிகளில் 300க்கும் அதிகமானோர் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கின்றனர். 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உள்ளனர்.

காளைகள் வளர்க்கும் மாரி, திருப்பதி, மாடுபிடிவீரர் ராஜ்குமார் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தோருக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் டோக்கன் வழங்கப்படுகிறது. இதில் நிறைய குறைபாடுகள் உள்ளது. கடந்தாண்டு 24 உள்ளூர் காளைகளுக்கு மட்டுமே டோக்கன் கிடைத்தது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது முறையான பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை.

இந்தாண்டு உள்ளூர் காளைகள் கூடுதலாக பங்கேற்கும் வகையில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து முன்னுரிமை அளிக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us