ADDED : அக் 31, 2024 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலை பள்ளியில் மாணவர் பார்லிமென்ட் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் சார்பில் ஆதரவற்ற முதியோர்களுடன் தீபாவளி கொண்டாட்டம் பள்ளியில் நடந்தது.
பள்ளி தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் கண்ணன், இயக்குனர் நடனகுருநாதன், தலைமை ஆசிரியர் ஆனந்த் முன்னிலை வகித்தனர். 40 ஆதரவற்ற முதியவர்கள் பள்ளிக்கு வரவழைத்து புத்தாடைகள், இனிப்புகள், மதிய உணவு வழங்கி அவர்களுடன் பட்டாசுகள் வெடித்து மாணவர்கள் தீபாவளியை கொண்டாடினர்.

