ADDED : ஆக 21, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா அ.வலையபட்டி, கிடாரிபட்டி பகுதிகளில் நடந்தது.
வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மேலுார் எம்.எல்.ஏ., பெரிய புள்ளான் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா அடையாள அட்டையை வழங்கினார்.
அவர் பேசுகையில், ''பதவி அல்லது நிதிக்காக மத்திய அரசுடன் தி.மு.க., இணக்கமாக செயல்பட துவங்கி உள்ளது. இண்டியா கூட்டணி தன் தலைமையில் உருவானது எனக் கூறிய முதல்வர் ஸ்டாலின், தற்போது மத்தியஅரசை விமர்சிப்பதை நிறுத்தி உள்ளார்'' என்றார். தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன், அவைத் தலைவர் ராஜேந்திரன், மேலுார் ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

